சுவையான நாகூர் மீன் குழம்பு செய்வது எப்படி
தேவையான பொருள்கள்நெத்திலி மீன்
1 cup~ தேங்காய் பால்
3~அரைத்த தக்காளி
1~வெங்காயம்
2 spoon~மல்லி தூள்
1/4 spoon~மஞ்சள் தூள்
2 spoon~அரைத்த தேங்காய் விழுது
2 spoon~மீன் குழம்பு தூள்
1 spoon ~மிளகாய் தூள்
தேவையான அளவு உப்பு
2~பச்சைமிளகாய்
தேவையான கருவேப்பிலை
தேவையான எண்ணெய்
செய்முறை
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்த பிறகு வெங்காயத்தைப் போட்டு நன்றாக வதக்கவும்
நன்றாக வதங்கிய பிறகு ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள் சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்துக் கொள்ளவும்
பிறகு அரைத்து வைத்த தக்காளி பேஸ்டை அதில் சேர்க்கவும்
பிறகு இரண்டு ஸ்பூன் மல்லித் தூள் 2 ஸ்பூன் மீன் குழம்பு தூள் கால் ஸ்பூன் மஞ்சள் தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும்
கொதி வந்த பின்னர் தேங்காய் பாலை சேர்த்து கொள்ளவும்
அரைத்து வைத்த தேங்காய் விழுதை 2 ஸ்பூன் சேர்த்து கொள்ளவும்
குழம்பு ஒரு கொதி வந்த பிறகு மீன்களை சேர்த்துக் கொள்ளவும்
மீன் குழம்பு கெட்டியாக வந்த பிறகு இறக்கவும்
சுவையான ருசியான நாகூர் மீன் குழம்பு ரெடி